கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக் நிர்வாகத்தில் சீர்கேடு: இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் அதிரடி அறிவிப்பு(Photo)
கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக்கின் நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் குழு ஒன்று கிளிநொச்சி வருகை தந்துள்ளனர்.
இந்த குழு நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்து கிளிநொச்சி லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களை சந்தித்துள்ளனர்.
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் அறிவிப்பு

இடைக்கால நிர்வாகம் ஒன்றினை அமைத்து உடனடியாக யாப்பு ஒன்றினைத் தயாரித்து காற்பந்து சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அதன் பின்னரே நிரந்தர நிர்வாகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் அனுமதி இன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் காற்பந்து லீக் தொடர்பான கூட்டங்கள் வைக்க அனுமதி இல்லை என்பதுடன் அவ்வாறான கூட்டங்களுக்கு செல்லும் கழகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.


உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri