கிளிநொச்சியில் இரண்டாம் காலாண்டுக்குரிய மாவட்ட விவசாய குழுக்கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாம் காலாண்டுக்குரிய மாவட்ட விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் துறைசார் திணைக்கள தலைவர்களின் பங்கேற்புடன் மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் இன்று (17-06-2025) முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெற்றது.
ஆராயப்பட்ட விடயங்கள்
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக செய்கை தொடர்பாகவும் ஏனைய விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்களும் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன் விவசாய அபிவிருத்திகள் அதொடர்பில் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.