கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட அபிவிருத்திக்குழு கூட்டம்(Video)
கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது இன்று (25.04.2023) மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில், 2023ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை மற்றும் மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகள், அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
சிறுபோக நெற்செய்கை
இதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான அனைத்து விவசாய
திட்டங்கள் மற்றும் செயற்படுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு
நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய உபஉணவு பயிர்ச்செய்கை , வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சிறிமோகனன் (நிர்வாகம் ), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருலிங்க நாதன் (காணி ), பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள், தெங்கு பயிர்ச்செய்கை சபையின் அதிகாரிகள், நெல் ஆராட்சி நிலையத்தின் அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் , உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள்
அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட மாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அரச காணிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
