பிரித்தானியாவில் உள்ளூராட்சி உறுப்பினராக இலங்கையரொருவர் தெரிவு
பிரித்தானியாவில் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினராக இலங்கையரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட நிலையில்,இலங்கையரொருவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
கொழும்பினை பிறப்பிடமாகக் கொண்ட லூஷன் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு பிரித்தானியா தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பிரித்தானிய அரசு இணைந்து இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்தவொரு தீர்வினை வழங்க தனது வெற்றி சிறந்தவொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும்,உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினர் லூஷன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்,இவர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானிய இராணுவம் மற்றும் மெட்ரோ பொலிஸ் ஆகியவற்றில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam