விஜயை கைது செய்வதில் தொடரும் நெருக்கடி..!
கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரசார பேருந்தில் இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை குறித்த கட்சியின் தலைவர் விஜய் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தமிழகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால், விஜயை கைது செய்வதில் ஒரு நெருக்கடி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கரூர் சம்பவம் என்பது எந்த தரப்பினராலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




