கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஒரே அணியில்: பின்னணியில் புலனாய்வுப் பிரிவு..!
உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசிய அரசியலிலும், தமிழ் தேசியத்திற்கு அப்பாற்பட்ட அரசியலிலும் பல கூட்டுக்கள் இணைந்துக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகிய தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றாக கூட்டிணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடயம் தமிழ் அரசியல் பரப்பில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இவர்கள் தங்களை அரசியலில் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த கூட்டிணைவில் ஈடுப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படியான கூட்டிணைவின் பின்னணில் இந்தியாவின் ரோ அமைப்பு உள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |