சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் நீடிக்கின்றது : முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய
நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வின்மை தொடர்ந்தும் நீடித்து வருவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் இரண்டு இன சமூகங்களிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இந்த குறுகிய எண்ணம் கொண்டவர்களினால் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் நாட்டுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த போதிலும் தற்பொழுது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களது நிலைப்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்காது அவர்களது கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri