கபில சந்திரசேன மர்ம மரணம் கிரிக்கெட் வீரரின் இல்லத்தில் - ஆரம்ப கட்ட விசாரணையில் தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது மைத்துனரான அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான, கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் பிளேஸில் உள்ள வீட்டில் சந்திரசேனாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான
சந்திரசேனாவும் டி சில்வாவும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் அனுஷ்கா டி சில்வா ஆகிய சகோதரிகளை மணந்திருப்பதால், இரு குடும்பங்களும் நெருங்கிய தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வந்தாலும், இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் மையத்தில் சந்திரசேனா இருந்தார்.
அதில் அவரும் அவரது மனைவியும் புருனேயில் உள்ள ஒரு போலி நிறுவனம் மூலம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனை
சந்திரசேனவின் இல்லம் கொழும்பில் உள்ள பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ளது என்றும், அவர் நேற்று அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு வந்தடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமற்ற பிணையாளர்களைச் சமர்ப்பித்ததன் மூலம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், கொழும்பு பிரதான நீதவான் நேற்று அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.
மரணம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்காவும் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam