திருமணத்திற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்
களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கி பயணித்த வான் கல்பத்த பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பொக்குனுவிட்ட, வெலிகல பகுதியை சேர்ந்த கே.பி. கருணாசேன என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலக்கவின் பணிப்புரையின் பிரகாரம் போக்குவரத்து பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ குமார தலைமையில் சார்ஜன்ட்களான வருண்வன சேனவிரத்ன (69058), லக்மால் (72157) ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
