ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் மொனராகலையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஊடகவியாலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று(13.08.2025) மொனராகலை நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார்.
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டப்.எச்.எம். தர்மசேன, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருருந்தனர்.

கட்சியின் மொனராகலை மாவட்ட செயற்குழுவின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு, கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது கட்சியின் உள்ளக விவகாரம் என்று கூறி ஊடகவியலாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam