ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Aanadhi Jan 05, 2025 10:48 AM GMT
Report

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கணவர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவத்தில் பொலிஸார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரபல சிங்கள ஊடகவியலாளரான ஶ்ரீயானி விஜேசிங்க தனது குடும்பத்துடன் தெஹிவளையில் வசித்து வருகின்றார்.

அவரது கணவர் ஏ.சமரஜீவ ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிகின்றார். இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தில், சமரஜீவ காலையில் வழமை போன்று பணிக்கு சென்றுள்ளார்.  

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

தொலைபேசி அழைப்பு

எவ்வாறாயினும், பணி முடிந்து வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்த போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

இதேவேளை, தெஹிவளை ஹில் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் சட்டத்தரணி ஒருவர் தனது வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக தெஹிவளை பொலிஸாருக்கு ஜனவரி 1ஆம் திகதி இரவு அழைப்பு விடுத்துள்ளார்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் விழுந்து கிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் குழு மீண்டும் சற்று நேரத்தில் அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை

எனினும், நீண்ட நேரமாகியும் பொலிஸார் திரும்பி வராத நிலையில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி இது குறித்து மீண்டும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்துகிடந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வௌ்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சனிக்கிழமை களுபோவில போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சீசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணியின் வாக்குமூலத்தின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா என்பதை கண்டறிய மேல்மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US