ஜீவன் தொண்டமான் பாய் படுக்கையுடன் இந்தியா சென்று விடுவதே பொருத்தமானது
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் இந்தியாவிற்கு சென்று விடுவது பொருத்தமானது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் சிறந்த முறையில் ஆய்வு செய்துள்ளதாகவும் அதனாலேயே அவர் இந்தியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திய காலம் முடிந்துவ விட்டது எனவும் பழைய கதைகள் இனிவரும் காலங்களில் எடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமானை வாழ்த்துவதாகவும், எதிர்வரும் 23ம் திகதி திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.