ஜப்பானுடனான இலகு ரயில் திட்டத்திற்கு முன்னுரிமையில்லை - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்கை முயற்சிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியது.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும், இலங்கையில் நிலைமை சீராகும் வரை அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தீர்க்க எங்களுக்கு இன்னும் அழுத்தமான பிரச்சினைகள் உள்ளன. உணவு நெருக்கடி உருவாகி வருகிறது, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றை நாங்கள் வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் தற்போதைய முன்னுரிமை பட்டியலில் அதிகமாக இல்லையெனவும்" அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
