தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடை
தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகச் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லும் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன.
இந்த செயற்பாடுகள் புதுவருட காலத்தின்போது அதிகரித்திருந்தன.
இதன்போது கைத்தொலைபேசிகள், போதை வஸ்துப் பொருட்கள் என்பன சிறைச்சாலைகளுக்குள் எடுத்துச்செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதேவேளை சிறைச்சாலைகளுக்குள்ளும் சட்டவிரோதப் பொருட்களை தேடியறியும்
செயற்பாடுகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாகச் சிறைச்சாலைகள் பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்.