முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு யாழ் தன்னார்வலரால் கிடைத்த உதவிகள்
முல்லைத்தீவில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கு தன்னார்வலர் ஒருவரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த தன்னார்வலர் தன் முனைப்போடு முன்வந்து கற்றல் உபகரணங்களை வழங்கி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உதவியுள்ளார்.
நேற்று (18.09.2024) பாடசாலை அதிபரின் முன்னிலையில் அவரது அலுவலகத்தில் வைத்து மாணவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்ட இந்த தன்னார்வ உதவியில் மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பென்சில்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டலாம்.
தந்தையின் நினைவு நாள்
தனது தந்தையின் நினைவு நாளினை முன்னிட்டு ரூபா ஐம்பதாயிரம் (50 000) பெறுமதியான கற்றல் உபகரணங்களையே அவர் வழங்கியுள்ளார்.
முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களின் பயன்பாட்டுக்கென இந்த உதவிகளை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொறியிலாளராக இருக்கும் இவரது தான்னார்வமான செயற்பாடுகளைச் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுப் பாராட்டுவதும் நோக்கத்தக்கது.பாடசாலைச் சமூகமும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதிக உதவிகள் தேவை
பொருளாதார நெருக்கடியில் தமது கற்றலை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் தேவையாக உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார வளம் உள்ளவர்கள் தன்னார்வமாக இவ்வாறான மாணவர்களை இனம் கண்டு உதவிகளை வழங்கி வரும் போது அவ் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.
வேலையின்மை, அதிகரித்த செலவு, குறைந்த சம்பளம் என ஒவ்வொரு முயற்சியாளரும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் குடும்பச் செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கே அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பிள்ளைகளின் கல்விக்காக நிதியைக் திரட்டி அவர்களை கற்பிப்பதில் தாம் பாரியளவிலான நெருக்கடிகளை எதிர் கொள்வதாக பெற்றோர் பலருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதிகளவான மாணவர்களை முல்லைத்தீவின் கிராமப்புறங்களில் அவதானிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கற்றலுக்காக; தனார்வமாக முன்வந்து உதவிகளை வழங்கும் ஆர்வலர்களை ஊக்குவிப்பதன் அவசியம் உணரப்பட்ட போதும் அவை உரிய முறைகளில் முன்னெடுக்கப்படுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.