வடக்கில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் (photo)
தரம் ஐந்து புலமை பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கமைய இவ் வருடம் தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை 329,668 ஆகும்.
இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 48,257.
14.64% மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ள நிலையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை17,622 ஆகும்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை 2,749ஆக உள்ள நிலையில் அதன் சதவீதம் 15.6% ஆகும்.
கிளிநொச்சி
இதற்கமைய கிளிநொச்சி - முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இம்முறைதான் குறித்த பாடசாலையில் மாணவன் ஒருவன் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளான்.
குறித்த பரீட்சையில் கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளான். இதனால் குறித்த பாடசாலை சமூகம் மிக்க மகிழ்வடைந்துள்ளனர்.
செய்தி: எரிமலை