செம்மணியில் இராணுவ புலனாய்வாளர்களுக்கு அச்சப்படும் உறவுகள்..!
செம்மணி மனித புதைகுழியில் ஒவ்வொரு நாள் அகழ்வின் போதும் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பபட்டுள்ளன.
செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான பகுதியில் மண்டையோடு ஒன்று றே்றையதினம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க முன்னதாக 1998 மற்றும் 1999 காலப்பகுதியில் செம்மணிப்பகுதியானது ஒரு பயங்கரமான பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக இதே காலப்பகுதியில் செம்மணிப்பகுதி தோண்டப்படுகின்ற போது இன்னும் பயங்கரமான இடமாகவே மக்களால் அறியப்பட்டது.
அந்தப்பகுதி மக்கள் செம்மணிக்கு வருவதையே தவிர்த்து விட்டார்கள். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றினால்தான் ஒரு தொகை மக்கள் பகுதியினர் நாட்டை விட்டுச் சென்றார்கள் என பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri