யாழ். மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய மேன்முறையீடுகளை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து நேற்றைய தினம் (26.06.2023) யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் அரச அதிபரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் அவர் கூறுகையில், குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளை மாவட்ட சமுர்த்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
அந்த மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை.
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டமான சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்டக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குப்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
