தமிழ் தொழிலதிபரின் நிதியுதவியில் யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவருக்கான விசேட திட்டம் (PHOTOS)
யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி தமிழ் மற்றும் REECHA ORGANIC FARM நிறைவேற்றுப்பணிப்பாளர் கந்தையா பாஸ்கரனின் நிதி அனுசரணையில் இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையம் அடிப்படை வசதிகளுடன் வர்த்தகப்பிரிவு வகுப்பறைகளின் மையப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது தொழில்நுட்பவியல் கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் குறுகியகால மாணவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.