இலங்கைக்கு உலங்குவானூர்திகளை வழங்கும் இத்தாலி
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை - இத்தாலிக்கு இடையிலான பங்காளித்துவம்
இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் கலாச்சார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, சாத்தியமான முதலீடுகள்,
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்த சவாலான காலங்களில் இத்தாலி எவ்வாறு
இலங்கைக்கு உதவ முடியும் என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக
ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
