சர்வதேச கடற்பரப்பில் 200 புலம்பெயர்ந்தோருடன் தத்தளித்த படகு! வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச கடற்பரப்பில் 200 புலம்பெயர்ந்தோருடன் தத்தளித்த படகினை ஏற்றுக்கொள்ள இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது.
இத்தாலியின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள Giorgia Meloni குறித்த படகை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த படகு நேற்று பிரான்ஸ் நோக்கிப் புறப்பட்ட நிலையில் இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்வது குறித்து மௌனம் சாதித்த நிலையில், பிரெஞ்சு தொண்டு நிறுவனமான SOS Mediterranee, பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.
இதனையடுத்து படகு பிரெஞ்சுத் தீவான Corsica பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
குறித்த படகிலுள்ள புலம்பெயர்வோரில் பலர், 18 நாட்களாக கடலிலேயே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




