மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம்! - சுகாதார அமைச்சு அறிவிப்பு (Video)
முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய ,இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ள அனைவரும் முழுமையான தடுப்பூசிக்காக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றிப்பது அவசியம் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக உலகளாவிய ரீதியில், இலங்கை சிறந்த நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இவை உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி செய்திகளில் இடம்பிடித்த மேலும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.