ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80ற்கும் மேற்பட்டோர் பலி
ஈரானின் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்திருந்த ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த பெரும் அளவிலான தாக்குதல்களின் உடனடி பொதுமக்கள் பாதிப்பு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

மினாப் நீதித்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 63 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல், ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இணைந்த ராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதனால் பிராந்திய அளவில் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் சேதமடைந்த பள்ளியின் புகைப்படத்தை வெளியிட்டு, “அப்பாவி குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்” என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, குறிப்பிட்டார்.
“ஈரான் மக்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு பதில் கிடைக்கும்,” என்று அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி, இந்த தாக்குதலை “வெளிப்படையான குற்றம்” என கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் தலையீட்டை கோரினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், மேஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் தெஹ்ரான் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள மற்றொரு பள்ளி மீதான தாக்குதலில் குறைந்தது இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்பு ஈரான் மக்களுக்கு உதவி வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் உயிரிழப்புகள் இடம்பெறுவது சர்வதேச சட்ட மீறலாகக் கருதப்படும் என்று ஈரான் வலியுறுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்
. இந்நிலையில், பள்ளிகள் மீதான தாக்குதல் குறித்த ஈரானின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து உடனடி பதில் வெளியாகவில்லை.
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam