ஞானஸ்தானத்தில் பங்கேற்ற 4 பேருக்கு கோவிட் - தேவாலய வணபிதா உட்பட 9 பேர் தனிமைப்படுத்தல்
மட்டக்களப்பு நகரிலுள்ள சென் செபஸ்தியார் தேவாலயத்தில் பெண் ஒருவருக்கு ஞானஸ்தானம் செய்வதற்கான சுகாதாரத் துறையினர் அனுமதி வழங்கப்படாத நிலையில், அதனை மீறி அதனை நடாத்தியதில் மன்னாரிலிருந்து அதில் பங்கேற்ற 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதனை நடாத்திய தேவாலய வணபிதா ஒருவர் உட்பட 9 பேரை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இன்று(16) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த தேவாலயத்தில் நகர்ப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்வதற்கான பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் பெண்ணின் பெற்றோர் அனுமதி கூறியுள்ளனர்.
அப்போது தற்போதைய சுகாதார அறிவித்தல் காரணமாக எந்த நிகழ்வும் செய்யமுடியாது என அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது எனச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுமதி வழங்கப்படாத நிலையில் சுகாதாரத் துறையினரின் சட்டத்தை மீறி நேற்று குறித்த தேவாலயத்தில் உறவினர்களுடன் பலருடன் இந்த ஞானஸ்தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த ஞானஸ்தான நிகழ்வில் பங்கேற்பதற்கு மன்னாரிலிருந்து அவர்களது உறவினர்கள் கடந்த வாரம் வந்து தங்கியிருந்து குறித்த ஞானஸ்தான நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் தமது சொந்த இடமான மன்னாருக்குச் செல்வதற்கான போக்குவரத்து அனுமதி பெறுவதற்காக இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் சென்ற நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் 4 பேருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொற்று உறுதி கண்டறியப்பட்ட இவர்கள் கோவிட் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த ஞானஸ்தான நிகழ்வைச் சட்டத்தை மீறி நடாத்திய தேவாலய வணபிதா உட்பட ஞானஸ்தானத்தில் பங்கேற்ற 9 பேரையும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
