பன்றிக்காய்ச்சல் அபாயம் குறித்து வௌியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காய்ச்சல், பன்றி இனப்பெருக்கம் மற்றும் சுவாச மற்றும் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தேவையான பின்வரும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம்
* ஆபத்தில் உள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தயாரிப்புகள் அல்லது நோயை உண்டாக்கும் பொருட்களை தொற்று அல்லது ஆபத்தில் உள்ள பகுதிகளின் வௌியே கொண்டு செல்வது, அகற்றுவது அல்லது விரட்டுவது.
* பாதிக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்தல்.
* நோய் அபாயத்தில் உள்ள விலங்குகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறைக்கு பயன்படுத்துதல்.
* ஆபத்தான விலங்குகளைப் பயன்படுத்தி நேரடி விலங்கு சந்தைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துதல்.
* பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் தயாரிப்புகள் மற்றும் நோயை உண்டாக்கும் பொருட்களை விற்பனை செய்தல், மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல் அல்லது விநியோகித்தல்.
* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் விட்டுச் செல்லுதல்.
* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை ஏனைய விலங்குகளால் வேறு இடத்திற்கு அல்லது பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடிய இடத்தில் வைப்பது அல்லது நிலைப்படுத்துவது தடை செய்ய சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
