இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடையின் பின்னணியில் தொழிற்சங்க சதியா? வெளியான முக்கிய தகவல்
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளமையினால் பொது மக்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த மின் தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாக இருக்கலாம் என்று மின்சார சபை முன்னர் அறிவித்திருந்ததது.
இந்நிலையில்,இந்த மின் விநியோக தடைக்கு தொழிற்சங்கங்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தீடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு இணைப்புகளின் நடவடிக்கைகளும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் எதிரொலியாக நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பலவற்றில், நீண்ட வரிசைக்காக சாரதிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
நாட்டு மக்களை திக்கு முக்காட வைத்த மின் தடை! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
முழு நாடும் இருளில் மூழ்கும்! மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை