இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பில் அனுப்பப்பட்ட தவறான கடிதம்: அதிகாரிகள் விசனம்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான 2022 மற்றும் 2023 பெரும்போக பயிர் செய்கை தொடர்பான முன்னயத்த கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் என தவறான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசன குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழும் சிறுபோக செய்கைகள் நிறைவு பெற்று காலப்போக பயிர் செய்கை முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலப்போக பயிர்செய்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (22-09-2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16க்கும் மேற்பட்ட திணைக்களங்களுக்கான கடிதங்கள் திட்ட முகாமையாளரின் கையொப்பத்துடன் நேற்றுமுன்தினம் (21-09-2022) பகல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் மட்டத்தில் குழப்ப நிலை

அதாவது நேற்றைய தினம் நடைபெற வேண்டிய கலந்துரையாடலுக்கு திட்ட முகாமையாளரால் நேற்று முன்தினமே குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன் 2022மற்றும் 2023 ஆண்டுக்கான பெரும் போகசெய்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டிய நிலையில் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பிலான கலந்துரையாடல் என கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன
இக்கடிதம் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகள் மத்தியிலும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இரணைமடுக் குளம்

அதாவது மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான
இரணைமடுக் குளத்தின் கீழ் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றதன் தொடர்சியாக
இவ்வாறு உயர் அதிகாரிகள் தவறான கடிதம் ஒன்றை நேற்றைய தினம் நடைபெற இருக்கின்ற
கலந்துரையாடலுக்கு நேற்று முன்தினம் கடிதத்தை அனுப்பி இருந்தமையானது
மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் மட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri