பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டது.
இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.
கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கோவிட் தொற்றான ஒமிக்ரோன் வைரசால் தற்போது பல்வேறு நாடுகளில் கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்சில் புதிய வகை உருமாறிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரசை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸ் ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்சின் மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கோவிட் ஒமிக்ரோன் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! .
ஒமிக்ரோனை விட 46-க்கும் மேற்பட்ட பிறழ்வு களை கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கோவிட் இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒமிக்ரோன் வைரசால் உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய வகை உருமாறிய கோவிட் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
