பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09.10.2023) நிறைவடையவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
2020 நவம்பரில் இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன, தனது பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு 3மாத கால பதவி நீடிப்பை வழங்கியிருந்தார்.
இரண்டாவது சேவை நீட்டிப்பு
முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதியின் பின் முதல் மூன்று மாத காலத்திற்கான இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா, அல்லது சி.டி. விக்கிரமரத்னவுக்கே சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri