கைதிகளுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்
கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக வெலிக்கடை, மகசீன் மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை என்பனவற்றின் கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
அதன் பின்னர் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளின் கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.