அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா

Parliament of Sri Lanka Ramanathan Archchuna
By Rukshy Feb 06, 2025 07:00 PM GMT
Report
Courtesy: Nixon

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் உரைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அது அவர்களின் சிறப்புரிமை. ஆனால், தவறான தகவல்கள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுக்களை உயர் அரச அதிகாரிகள் மீதோ அல்லது அமைச்சர்கள் ஏனைய உறுப்பினர்கள் மீதோ சுமத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்

அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்

மேலும், உரிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து, சம்மந்தப்பட்ட உயர் அரச அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் ஒருவர் சபாநாயகரிடம் கோரலாம் .

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

அது அந்த உறுப்பினருடைய சிறப்புரிமை. ஆனால், முன்வைக்கப்பட்ட தகவல் தவறாக இருந்தால், அந்த அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

அந்த பொய்க் குற்றச்சாட்டுப் பற்றி மற்றொரு உறுப்பினர் சபாநாயகரிடம் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சுட்டிக்காட்டினால் மாத்திரமே ஹன்சாட் அறிக்கையில் இருந்து உடனடியாக அது நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களிலும் அக்குற்றச்சாட்டுக்களை வெளியிட முடியாத நிலை ஏற்படும்.

ஆகவே, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகளின் தந்தையான ஏர்ஸ்கின்மே (Erskine May) உருவாக்கிய விதிகளின் பிரகாரம் உரிய ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு உறுப்பினரும் எந்த ஒரு அரச உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

பொறுப்பற்ற உரைகள் 

உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையின் பிரகாரம் அவருடைய உரைகளில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுப்பினர்கள் தவிர்ந்த வெளியில் உள்ள உயர் அரச அதிகாரிகளோ அல்லது பொதுமக்களோ கேள்விக்கு உட்படுத்த இயலாது என்ற ஒரு காரணத்துக்காக, ஆதாரமற்ற – பொறுப்பற்ற உரைகளை நிகழ்த்த முடியாது.

இதனை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் புதிய உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வட பகுதியில் மருத்துவ மாபியாக்கள் உருவெடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

ஆனால், இப்படியான ஆதாரமற்ற மற்றும் தனிப்பட்ட ரீதியில் ஓரிருவர் மீது காழ்ப்புணர்வுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மருத்துவ மாபியாக்களை காப்பாற்றுவதாகவே அமைந்து விடும்.

அதேநேரம், Mental Disorder (மன நலக் கோளாறு) என்று ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அல்லது மருத்துவர் அர்ச்சுனா அதனை உடனடியாக சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியதற்கு மருத்துவ ஆதாரம் உள்ளதா என்று வினவியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும்...

ஆனால், அர்ச்சுனா மீதுள்ள அதிருப்தியில் எந்த ஒரு உறுப்பினர்களும் இவ்வாறு கோரவில்லை.

எனினும் நிலையியற் கட்டளை விதிகளின் பிரகாரம் அந்த வார்த்தை ஆபத்தானது. இருந்தாலும், உறுப்பினர் ஒருவர் அதுவும் சிங்கள உறுப்பினர் ஒருவர் அவ்வாறு ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார் என்றால், அது தனது நடத்தைக் கோளாறுதான் காரண - காரியம் என்பதை அர்ச்சுனா புரிந்துகொள்ள வேண்டும்.

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

ஆகவே, ஏதாவது அரசியல் கொள்கை இருக்க வேண்டும். அல்லது கொள்கையே இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நடத்தையிலும் பேச்சிலும் நாகரிகம் இருக்க வேண்டும்.

எனினும், உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும் எந்தவொரு ஆதாரமற்ற உரைகள் - குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஊடகவியலாளர் நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர்

அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர்

படைக்கல சேவிதரைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்! அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்

படைக்கல சேவிதரைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்! அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US