விடுதலைப் புலிகளின் தலைவரை எதிரி என்றே காட்டினார்கள்! சிங்கள இளைஞன் ஆவேசம்

Sri Lanka Army Galle Face Protest Sri Lankan political crisis
By Vethu Jul 24, 2022 06:08 PM GMT
Report
125 Shares

புதிய இணைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது தொடர்பில் சிங்கள இளைஞன் ஒருவர் காணொளி வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில்,


வடக்கில் உள்ள மக்களை இப்படிதான் தாக்கி இருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த (ஜனாதிபதி செயலகம்) இடத்தில் சாதாரண, அமைதியான மக்களே இருந்தனர்.

இங்கிருந்த அமைதியான மக்களை தாக்கினார்கள் என்றால், இந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களை எப்படி நடத்தியிருக்கும். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது ஆத்திரம் கொண்டிருப்பது நியாயமானது அல்லவா.

வடக்கு, கிழக்கில் தாக்குதல் நடத்தும் போது, நாம் இங்கு போர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தோம். போர் வெற்றிகளையும் பிரபாகரன் எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சிகளில் காட்டினர்.

மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டது, வடக்கு, கிழக்கில் சாதாரண மக்களை தாக்கினர் என்று கூறினார்கள். நீங்கள்(படையினர்) இப்படி தாக்கி இருக்க மாட்டீர்கள் என்று எப்படி நாங்கள் தற்போது நம்புவது.

இராணுவத்தினர், முப்படையினரும் வந்து இங்குள்ள( ஜனாதிபதி செயலகம்) சாதாரண மக்களை மோசமாக தாக்கினர். வடக்கு, கிழக்கை புலிகள், விடுதலைப்புலிகள் என பிரித்தனர். இப்போது என்ன சொல்ல போகிறீர்கள். தற்போதாவது தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

தென்னிலங்கையில் இடம்பெறும் அரசியல் விளையாட்டுக்கள் சிங்களவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், தமிழர்கள் தொடர்பான சாதக நிலைப்பாடுகளும் தென்படத் தொடங்கியுள்ளன.

நேற்றையதினம் காலிமுகத்திடலில் கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடற்படையினர் அட்டகாசம்

விடுதலைப் புலிகளின் தலைவரை எதிரி என்றே காட்டினார்கள்! சிங்கள இளைஞன் ஆவேசம் | Information Published By A Sinhalese Youth

இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிடுகையில், “எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள்.

போரில் மக்கள் செத்து மடியும் போது நாங்கள் போர் வெற்றி கொண்டாடினோம். அப்படி என்றால் நாம் எப்படி முட்டாளாக்கப்பட்டு தமிழ்களை புலிகள் என்று ஒதுக்கியிருப்போம். தொலைகாட்சியில் காட்டப்பட்ட விடயங்களை வைத்து பிரபாகரன் மீது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினார்கள்.

தமிழர்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்

விடுதலைப் புலிகளின் தலைவரை எதிரி என்றே காட்டினார்கள்! சிங்கள இளைஞன் ஆவேசம் | Information Published By A Sinhalese Youth

நாங்களும் அவர்களை புலிகள், தீவிரவாதிகள் என ஒதுக்கி வைத்தோம். அப்படி என்றால் சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது. இராணுவத்தின் செயற்பாடு அவ்வாறான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிலான் வெளியிட்ட காணொளிக்கு பெருந்தொகையான சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமது பின்னூட்டங்களை வெளியிட்டுள்ளனர். காலி முகத்திடலில் இராணுவத்தின் வெளியாட்டத்திற்கு ஐ.நா சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US