இலங்கை கடலை மாசுப்படுத்திய 26 கப்பல்கள் குறித்து வெளியான தகவல்
கடந்த வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மாசு ஏற்படுத்தியதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரவேசித்த 24 கப்பல்கள்
கடல் மாசுபாட்டைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், கடல் மாசுபாட்டை கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலில் ஏற்பட்ட இரண்டு பெரிய கப்பல் விபத்துக்கள்( நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்-பிரஸ் பேர்ல்) இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தின.
இதனை தவிர கடந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 24 கப்பல்கள் கடல் மாசுபாட்டிற்கு பங்களித்துள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இறுதியில் கடல் உணவுகளை உட்கொள்ளும் பொதுமக்களும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam