இலங்கைக்கு எதிராக பேசிய இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே - பழ. நெடுமாறன்
இந்திய சுதந்திர தினத்தன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுவது இனப்படுகொலை என அறிவித்தவர் இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
எமது ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்தால் தமிழர்கள் கொள்ளப்பட்ட போது இலங்கைக்கு எதிராக பேசிய இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே.
இவர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதி,கொடுமைகளை உண்மையிலேயே உணர்ந்து செயற்பட்ட ஒருவராவார்.
இதனை சீர் செய்யும் நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வட்ட மேசை மாநாட்டினை நடத்த செய்து சிங்கள் அரசின் பிரதிநிதிகளுடன்,தமிழர் தரப்புகளையும் இணைத்து பேச்சு வார்த்தையினை நடத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து,மாநாட்டில் வகுக்கப்பட்ட திட்டத்தின் படி ஒப்புக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன பின்னர் திட்டத்திலிருந்து நலுவ தொடங்கினார்.
இதன்போது இலங்கை அரசு தம்மை ஏமாற்ற முயற்சிக்கின்றதென்பதை இந்திய பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்துக்கொண்டார்.இதன்போதே போராளிகளுக்கு ஆயுத பயிற்சியை கொடுக்க இந்திரா காந்தி முடிவு செய்தார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையினை அவர் மேற்கொள்ள முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார்.இதன்போது அனைத்தும் திசை திரும்பிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.