மலேசியாவில் இந்திய பெண்ணுக்கு நடந்த துயரம்
மலேசியாவின் - கோலாலம்பூரில் நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சித்தூர் மாவட்டத்தின் அனிமிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய விஜயலட்சுமி, அங்குள்ள நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாதை திடீரென இடிந்து விழுந்தமையினால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அருகில் இருந்த விஜயலட்சுமியின் கணவர் மற்றும் மகன் உயிர் தப்பியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பொது அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், சனிக்கிழமை(24) மாலை வரை குறித்த பெண் தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் வியாபாரத்தின் காரணமாக மலேசியாவுக்கும் பயணம் செய்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்து வெளிநாட்டுப் பிரதேசம் (APNRT) அமைப்பின் அதிகாரிகளுக்கு, மீட்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கல்வி மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷுடன் இணைந்து முதல்வர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
