அமெரிக்காவில் மனைவி - மகனை படுகொலை செய்த இந்தியர்
அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், தானும்(கணவர்) துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கர்நாடக பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57) அவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44) மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24ம் திகதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடு
ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் மற்றொரு மகனையும், மனைவியையும் ஹர்ஷ்வர்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார், 3 பேரின் உடல்களையும் பெற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
