இலங்கை குடிமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்
விசா மற்றும் தூதரக சேவைகள் தொடர்பாக இலங்கை குடிமக்களிடமிருந்து, கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகமும் அதன் ஊழியர்களும் இந்த கோரிக்கைகளை சிறந்த முறையில் வழங்க உறுதிபூண்டுள்ள போதிலும், கொவிட் காரணமாக இலங்கையில் தூதரக மற்றும் விசா விவகாரங்கள் தொடர்பான பொது சேவைகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, கோவிட் தொடர்பான தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை துரதிஷ்டவசமாக அதிகரித்துள்ளன. மற்றும் கொரோனா வைரஸின் உலகளாவிய அளவில் டெல்டா மாறுபாடு பரவி வருகிறது.
எனவே பொது சுகாதார நலன் கருதி பணியிடத்தில் கோவிட்க்கு பொருத்தமான வருகை மற்றும் நடத்தைக்கு இணங்க உயரஸ்தானிகரகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
எனவே, உயர்ஸ்தானிகரகத்திடம் இருந்து விசா மற்றும் தூதரக சேவைகளைப் பெற விரும்புவோர், இந்த விடயங்களை மனதில் வைத்து அதற்கேற்ப திட்டமிடுமாறு இந்திய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.
பாதுகாப்பான மற்றும் கோவிட்-பொருத்தமான பயணத்தின் மூலம் மக்களிடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையேயான பழமையான, நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கூறியுள்ளது.