எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் 15 இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியா - நாகபட்டினத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை குறித்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீரியல்வள திணைக்களம், கடற்றொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
