அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய குடும்பத்தின் வழக்கில் திருப்பம்! பொலிஸாரின் வலையில் சிக்கிய முக்கிய நபர்
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கடத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36) மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்த நிலையில் 4 பேரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இந்தியாவில் உள்ள பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அந்த குடும்பத்தினர் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று மத்திய கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜீசஸ் மானுவல் சல்காடோ என்ற 48 வயதுடைய நபர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதுடன், பின்னர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் ஜீசஸ் மானுவல் சல்காடோ மெர்சிட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூரமான சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் , தடயங்கள் உள்ளதாகவும் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்துளள்னர்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 45 நிமிடங்கள் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan
