அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல்! தீவிரமடையும் விசாரணை
அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் இந்திய குடும்பம் வசித்து வரும் நிலையில், துப்பாக்கிமுனையில் நேற்று சிலர் கடத்திச்சென்றுள்ளனர்.

மர்ம நபரால் கடத்தல்
மெர்சிட் கவுண்டியில் (Merced County) வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லின் கவுர் உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இந்திய குடும்பத்தினரை கடத்தி சென்றது யார்? எத்தனை பேர் கடத்தி சென்றனர்? கடத்தலுக்கான காரணம் என்ன? என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri