அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல்! தீவிரமடையும் விசாரணை
அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் இந்திய குடும்பம் வசித்து வரும் நிலையில், துப்பாக்கிமுனையில் நேற்று சிலர் கடத்திச்சென்றுள்ளனர்.
மர்ம நபரால் கடத்தல்
மெர்சிட் கவுண்டியில் (Merced County) வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லின் கவுர் உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இந்திய குடும்பத்தினரை கடத்தி சென்றது யார்? எத்தனை பேர் கடத்தி சென்றனர்? கடத்தலுக்கான காரணம் என்ன? என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
