அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையில் தரையிறங்கிய இந்திய இராணுவம்
கிறீன்லாந்தை போன்றுதான் இலங்கையும் இரண்டு விதத்தில் முக்கியமானதாக அமெரிக்காவிற்கு தோன்றுகிறது.
ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள கனிம வளமும் இரண்டாவதாக இலங்கையை கைப்பற்றினால் ஆசிய பிராந்தியத்தை இலகுவாக கையாள முடியும் என்ற நிலைப்பாடும் ஆகும்.
இஸ்ரேலை வைத்துக் கொண்டு எவ்வாறு அரபு நாடுகளை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றதோ, தாய்வானை வைத்துக் கொண்டு சீனாவை எவ்வாறு மேலே செல்லவிடாமல் தடுக்கின்றதோ அதேபோலத்தான் இலங்கையையும் அமெரிக்கா கைப்பற்றுமாக இருந்தால் இந்தியாவை இலகுவாக தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
முன்னதாக, 1987இல் அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதித்தது. இதுவரையில் இந்திய இராணுவம் சீனாவுக்கு எதிராக இன்னும் கால்பதித்தது இல்லை.
மேலும், இந்தியாவை எந்தவொரு வகையிலும் விஸ்தரிப்பு செய்யாமல் அமெரிக்கா தடுத்து வருவதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையினுடைய முக்கியத்துவமும் இலங்கையினது மும்முனைப்போட்டியில் யார் வெற்றி கொள்வார் என்பது தொடர்பாகவும் இராணுவ விவகாரம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri