இந்தியாவை பொலோ ஒன்னில் இருந்து காப்பாற்றிய பும்ரா- தீபக்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய(Australia) அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(17) நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பொலோ ஒன் முறை
முன்னதாக அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய இந்திய அணி ஒருக்கட்டத்தில் 3 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும் கே எல் ராகுல்(K.L.Rahul) மற்றும் ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) ஆகியோரின் துடுப்பாட்டம், இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவியது.
அதிலும், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான பொலோ ஒன் முறையை தவிர்ப்பதில், இறுதி விக்கட்டுக்காக துடுப்பாடிய பும்ராவும், ஆகாஸ் தீபக்கும் முக்கிய பங்கை வகித்தனர்.
இதன்படி பும்ரா(Bumra) ஆட்டமிழக்காமல், 10 ஓட்டங்களையும், தீபக் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இறுதி நாள் ஆட்டம்
தமது இந்த துடுப்பாட்டத்தின்போது, இருவரும் தலா ஒரு ஆறு ஓட்டங்களை பெற்று 10 வது விக்கட்டுக்காக இரண்டு ஆறு ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளை(18) நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
