ரணில் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா! வெளிநாட்டு புலனாய்வுத்துறை களத்தில் - இராணுவ ஆய்வாளர் (VIDEO)
இலங்கையின் புலனாய்வுத்துறையானது வெளிநாடுகளின் புலனாய்வுத்துறையினரைதான் அதிகளவில் தங்கியுள்ளது. அண்மையில் கூட இந்திய கடற்படையினரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து கொழும்பில் ஒரு கூட்டு புலனாய்வு துறை தலைமையகத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஞாயிறு உயிர்த்த தாக்குதலின் போதும் கூட இந்திய உளவுதுறைதான் இலங்கைக்கு முதலில் தகவல்களை வழங்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.