தொடரும் இந்தியாவின் சதித்திட்டம் : எச்சரிக்கும் தேரர்
நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொக்காவில் தாக்குதலின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
29வது இந்திய மாநிலமாக
நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை.
இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபா கடன் நிவாரணம் வழங்கப் போகிறது.
இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.
புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவி தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டை பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29வது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30ஆவது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
