யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றையதினம்(26.01.2026) இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து
இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன். கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) வீரவணக்கம் செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விசேட கலாசாரப் பெருவிழா
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.









தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri