சூடுப்பிடிக்கும் இந்திய - சீன மோதல்: ஜி ஜின்பிங்கின் திடீர் அறிவிப்பு - இந்திய எல்லையில் தொடரும் பதற்றம்
இந்திய எல்லையை ஒட்டி குவிக்கப்பட்டிருக்கும் சீன இராணுவத்தினர் மத்தியில், போருக்கு தயாராக இருக்குமாறும், எந்தவித தாக்குதலையும் எதிர்கொண்டு திருப்பித் தாக்க படைகளை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன இராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எல்லையில் தொடர்ந்து பதற்றம்
இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின.
இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன இராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொளி வழியாக திடீரென ஆய்வு செய்துள்ளார்.
அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன இராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.
போருக்கு தயாராக இருங்கள்
சீனாவுக்கு தற்போது சவாலான காலம் நிலவி வருகிறது. அதனால் அனைத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, போருக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் எவ்வித தாக்குதலையும் சமாளித்து திருப்பித் தாக்கும் தயார்நிலையில் இராணுவம் இருக்க வேண்டும் என ஜி ஜின்பிங் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டறிந்ததோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
