இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து செல்லும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோவிட் தொற்று உறுதியான மேலும் 736 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,890 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 341,982 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 2,154 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 341,246 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,244 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்றுlன் 300,000 ஐ கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

