அதிகரிக்கப்பட்டுள்ள இடவாடகைக் கட்டணம் : நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் இடவாடகைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (26.06.2023) நடைபெற்ற சந்திப்பின் போதே வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் இது தொடர்பில் நடவடிக்கையினை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுத் தொகையின் கட்டண அறவீடு
அதற்கமைய புதிய மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலான கட்டண அறவீட்டினால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அதனைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
உரிய தீர்வு முன்னெடுக்கப்படல்
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையிலான தீர்வைப் பெற்றுத்தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கருப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் வடக்குமாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
