பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்! பவுண்டு நாணய மதிப்பு அதிரடியாக உயர்வு
அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானியாவின் பவுண்டு நாணய மதிப்பு புதன்கிழமையான இன்று மூன்று வாரங்களில் அதிகபட்சமான உயர்வை அடைந்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானியாவின் பவுண்டு மதிப்பு $1.16க்கு மேல் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 10:59 CETயில் டொலருக்கு எதிராக பவுண்ட் 1.18% உயர்ந்து 1.16052க்கு விற்கப்பட்டுள்ளது.
இது மூன்று வாரங்களில் அதிகபட்சமான உயர்வு என்றும் பிரித்தானியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை வேகத்தை வலுப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.