ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கோவிட் சடலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மேலும் 7 பேரின் சடலங்கள் கடந்த இரு நாட்களில் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று மேலும் 6 சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள கோவிட் - 19 தொற்றுக்கு இலக்கானவர்களின் சடலங்களின் எண்ணிக்கை 3120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.